Wednesday, December 19, 2007

நாதம் -இசை -ராகம்


நாதம் -இசை -ராகம்

-----------------

நாதம் என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழ் ஒலி இசை என்று பெயர்.இனிமையயை தருகின்ற ஒலியே நாதம் அல்லது இசை ஒலியாகும் நாதத்ததை ஆகாத நாதம் என்றும் அனாகத நாதம் என்றும் பிரிப்பார்கள்.


மனித முயற்சியால் ஏற்படும் நாதத்திற்கு ஆகாத நாதம் என்றும்.

இயற்க்கையில் காணப்படும் நாதத்திற்கு அனாகத நாதம் என்றும் பொருள் படும் குரலிசையும் கருவி இசையும் நாட்டிய இசையும் ஆகத நாதத்தை சேர்ந்தது.நாதம் என்ற இசை ஒலியை ஒரு கடலுக்கு ஒப்பிட்டால். சுரங்களை கடலுக்குள் இருக்கும் முத்துக்களை ஒப்பிடலாம்.ஒவ்வொரு சுரமும் ஒரு தனிப்பட்ட அளவு கொண்ட இசைஒலியாகும் முத்துக்கள் பொண்ற சுரங்களை பல்வேறு முறையில் தொகுக்கும் பொழுது இராகங்கள் என்ற முத்துமாலைகள் நமக்கு கிடைக்கின்றன.


ஒவ்வொரு முத்துமாலையும் ஒரு தனி வடிவத்தை கொண்டுள்ளது. எனவே நாதம் என்ற இசை ஒலியிலிருந்து சுரங்களும்

சுரங்களில் இருந்து ராகங்களும் தோண்றுகின்றது.


சுரங்கள் 7 வகையாகும்.

1- சட்ஜம் என்று அழைக்கப்படும் குரல்.

2- ரிசபம் என்று அழைக்கப்படும் துத்தம்.

3- காந்தாரம்என்று அழைக்கப்படும் கைக்கிளை

4 மத்திமம் என்று அழைக்கப்படும் உழை.

5-- பஞ்சமம் என்று அழைக்கப்படும் இளி

6- தைவதம் என்று அழைக்கப்படும் விளரி

7- நிசாதம் என்று அழைக்கப்படும். தாரம்.


இதுவே சுரங்கள்7 ஆகும்.


சுரஸ்தானம்- என்பதை இசை ஒலி நிலை என்று குறிப்பிடலாம்.

இவ்வாறு 12 இசை ஒலி நிலைகள் உண்டு சட்ஜம் பஞ்சமம் என்ற ஒலி நிலைகளோடு ரிசபம் காந்தாரம் மத்திமம் தைவதம் நிசாதம் என்ற 5 ஒலி நிலைகளும் தனித்தனியே உள்ள 2 பிரிவுகளோடு சேர்ந்து 12 இசை ஒலி நிலையாகியது பன்னிரு சுரஸ்தானங்கள் பன்னிரு வீடு என்றும் பன்னிரு நிலம் என்றும் சொல்லப்படும்.


அன்புடன்

தமிழ் குயில்

ராகினிஜெர்மனி.

http://rahini.blogspot.com/http://thiraviyam.blogspot.com/இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்

No comments: