Thursday, June 19, 2008

தொல்கர்பியர்

இசை மாமேதைகளின் ஒருவரானதொல்கர்பியர்.
பற்றிய விளக்கம் .
-------

தொல்காப்பியரின் காலம் கி.மு 7 ஆம் நூற்றாண்டிற்க்கு முந்தியது என்று கூறப்படுகின்றன.

இவர் இயற்றிய நூல் தெல்கபப்பிய இலக்கண நூலாகும் இந்த நூல் எழுத்துச்சொல் ; பொருள் என்று முன்றுவகையானது.

இந்த நூலின் பெருமை என்ன வென்றா இசை பற்றிய பல அரிய செய்திகளை வாரி வளங்கப்பட்டன.

இதில் ஜவகை நிலங்கள் .ஜவகை யாழ் வகைகள் . ஜவகை பறை வகைகள் சுட்டிக்கட்டப்பட்டுளது. இதில் எண் என்பது. 1-2-3-4-5 நிலம் -என்பது - முல்லை நிலம்; குறிஞ்சி நிலம்; முருத நிலம்; நெய்தல் நிலம் ; பாலை நிலம்.

யாழ் என்பது- முல்லை யாழ்; குறிஞ்சி யாழ் ; மருத யாழ் நெய்தல் யாழ்; பாலை யாழ்.

பறை- என்பது- ஏறுகோட்பறை ; தொண்டகப்பறை :நெல்லரிகிணை மீன்கோட்பறை.

தொல்காப்பியத்தில் யாழ் ஒரு கருப்பொருளாகவும் யாழின் பகுதி ஒரு கருப்பொருளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றும் யாழ் ஏழு நரம்புகளை கொண்ட பெரும் பண்ணையும் யாழின் பகுதி சிறு பண்ணையும் குறித்தது.தொல்காப்பியம் பல்வேறு இசைப்பாடல்களை விளக்ககின்றது 1- கலிப்பாடல் 2- பரிபாடல் 3- தேவபாணி 4- வெண்பா 5-ஆசிரியம் 6- பண்ணித்தி முதலியவையாகும் .மேலும் ஒலிகள் பிறக்கத் துனை செய்யும் உறுப்புக்களை விரிவாக வகைப்படுத்தி கூறுகின்றது நாவின் அசைவாலும் உதட்டின் அசைவாலும் உதடுகளை குவிப்பதிலும் விரிப்பதிலும் இசையில் ஒலிகள் தேன்றுவது விளக்கப்பட்டுள்ளது .

அடிவயிற்றில் இருந்து இசை ஒலி எழும்பப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. துள்ளல் தூங்கல் அகவல் ஆகிய ஓசைகளை அமைக்கும் முறைகளை காட்டப்பட்டுள்ளது. குறளடி ; சிந்தடி: அளவடி; நெடிலடி; கழி நெடிலடி என பாடல் அடிகளின் வகை காலக் கணித மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது . ஓவ்வொரு இசைத்துறை நடத்தியதை தொல்காப்பியம் குறிப்பிடுகின்றன முல்லை பண்ணும் : குறிஞ்சிப்பண்ணும் மகிழ்ச்சி சுவைக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. நெய்தல் பண் இரங்கல் சுவைக்கு உரியவை. முரதப் பண்- வெகுளிச் சுவைக்கு உரியவை. தொல் காப்பியம் குறிப்பிடுகின்றது. எஞ்சியுள்ள பெரும் பொழுது சிறிய பொழுது பற்றி தொல்காப்பியத்துக்கு முன்னரே பத்து பாட்டில் எட்டுத்தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.பாடல்களை காலப்படுத்தி பாடும் முறை தொல் காப்பியம் தொடங்கி மரபாக வருகின்றது தொல்காப்பியத்தில் உள்ள இசை பற்றிய ஒவ்வொரு செய்திகளை தொகுத்து எடுத்தால் ஓர் அரிய இசை நூல் ஒன்று உருவாக்கி எடுக்கலாம்.

மீண்டும் வருவாள்
இந்த இசைகவிக்குயில்
ராகினி
isaikuyil@googlemail.com

Monday, June 2, 2008

குரலிசையும் கருவியும் இசையையும் ஒன்றாக அறிதல்

குரலிசையும் கருவியும் இசையையும் ஒன்றாக அறிதல்.
----

குரல் இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட ஒரு அரிய சாதனம் இதை பாதுகாக்க வேணஇடியது நாம்தான் அதிகமான குளிர் நீர் அருந்துல் தவறு அதகமான சுடு நீர் அருந்துவதும் தவறு. இரண்டுமே நம் குரலை பாதிக்கும். நாம் பாடுவது ஒவ்வொரு வருடைய முயற்ச்சியாகும். பாடுதல் என்பது ஒரு மிகச்சிறந்த கலையாகும் குரல் இல்லாதவனுக்க விரல் உண்டு என்பது பாட இருப்பவருக்க வாத்தியம் இசைப்பவர் வேண்டும் என்பதுதான் கருத்து.
பாடுவது மற்றவர் பாடுவது போல் பாட முயற்சி எடுத்து பாட மடியும் ஆனால் வாத்தியம் அப்படி அல்ல.

நல் ஆசிரியரிடம் இருந்து கற்றக்கொள்ள வேண்டும். பாடகர் சாதரணமா நினைத்தவடன் பாட முடியும் ஆனால் வாத்தியம் வாசிக்க முடியாது தனது கருவியை முதலில் ஒழுங்கு செய்த பின்தான் வாசிக்க முடியும். குரலிசையால் நாம் பெறும் மிகப்பெரிய நன்மை என்ன வென்றால் பாடல்களில் வரிகளை நாம் கேட்டு மகிழ முடியும். கருவி இசை வடிவில் சொற்களை தெளிவாக கேட்டு ரசிக்க முடியாது இசையை மட்டுமே ரசிக்க முடியும். குரலிசை வழியாகத்தான் சங்கதிகளை கேட்டு ரசிக்க முடியம்.

ஒரே இராகத்தில் வெ வ்வெறு மெட்டுக்களை ஞாகப்பகத்தில் வைத்துக்கொள்வதற்கு சாகித்தியம் தெரிந்து இருப்பது அவசியம்.இசைக்கறியீடு பயன்படுத்தப்படாத முற்காலத்தில். பாடல்களின் மெட்டுக்கள் ";இப்பாடல் ரதிசுகசாரே என்ற மெட்டில் அமைக்கப்பட்டது என்று குறிப்பிடுவார்கள்.

குரலிசையாலர் பாடுவதற்கு தானே தாளத்தை போடுவதற்க்க வாய்ப்புள்ளது கருவி வாசிப்பவர்களுக்க இந்த வசதி கிடையாது புல்லாங்குழழ் வயலின் வாசிப்பவர்கள் தங்கள் கால்களாhல் தாளம் போட்டுக்கொள்வார்கள். ஆனால் சில சமயம் தாளம் தவறி விடும்.
ஜதிகளைக் கொண்ட பாடல்களும் தலஇலானாக்களும் பாடப்படும் பொதுதான் கெட்க இன்பமாய் இருக்கும்.

சில சமயம் ஏறக்குறைய ஓரெ விதமான இசை அமைப்பைக் கொண்ட இரண்டு கிருதிகளில் ஒற்ரைக்கருவிகளில் வாசிக்கும் போது கேட்ப்பவருக்கு உண்மையில் எந்தக்கிருதி வாசிக்கப்படுகின்றது என்ற சந்தேகம் வரும்.ஆனால் குரலிசை சந்தேகத்தை தராது.
கருவி இசையாளர்கள் குரலிசையையும்கற்று வாத்தியத்தை வாசித்தால் சிறப்பாக இருக்கும்.
------

குரலிசையாலர் கடைப்பிடிக்க வேண்டியநிறைகள்.
-------------------


தெளிவான இனிமையாயன கயவர்ச்சியான குரலை கொண்டிருத்தல்.
உறுதியான சுருதி ஞானமும், சுர ஞானமும், இராக ஞானமும் தாள ஞானமும் பெற்றிருத்தல்.
சுருதியும் லயமும் வழுவாது பாடுதல்.
நல்ல கற்பனை லயம் பெற்றிருத்தல்
இயல் ஞானம் முழமையாக பெற்றிருத்தல்.
இரண்டரை ஸ்தாயி வரைக்கும் சிரமமிலஇலாமல் பாடுவதற்கு ஏறஇற சாரீர வளம் கொண்டிருத்தல் இதாவது அழுத்தமாக இருக்கனும். தான் வீரும்பிய சுரக் கோர்வையை பளிச்செனஇறு பாடக்கூடிய சாரீரம் இருக்கனும். இசை நிகழ்சஇசியின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை குரலின் வன்மை குறையாதிருத்தல் வேண்டும் முகம் மலர்ந்து புன்னகை சிந்தி தன்னம்பிக்கையுடன் பயம் விலக்கி பாடனும்.
ஒவுஇவொரு சங்கதிகளும் துரித காலப் பிரயோகங்களும் வழக்கமா கேட்ககூடியதாக பாடனும்.
இசை வடிவங்களை அவற்றுக்குரிய காலவடிவத்தில் பாடுதல். இராகமும் தாளமும் நன்க வெளிப்படும் படியாக வேண்டிய இடங்களில் அழுத்தமாகவும் நயத்துடனும் பாட வேண்டும்.
சாகித்திய வரிகளை நன்றாக உச்சரிச்சு அதன் பொருளை நன்றாக விளங்கக்கூடியதாக பாடவேண்டும். பாமர மக்களும் புரியும் படியாக இருத்தல் வேண்டும்.
நல்ல ஞாபப் படுத்தி சந்தேகத்தை விளத்தி உற்ச்சாகமாக பாடனும்.
வாத்தியக்கருவிகளுடன் ஒத்துப்பொக வேண்டும். சுருதி விளகாது பாடுதல் வேண்டும்.
முக்கியமாக ரசிகர்களை கவரும் படியாக நல்ல தெளிவான முறையில் பாட வேண்டும்.

இததான் வாத்திய இசைக்கும் குரலும் உள்ள வேறு பாடு.
மீண்டும் வருவாள்
கவிதைக்குயில் ராகினி
இசையின் ஊடாக.

kavithaikuyil@mail.com